தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி: சேதமடைந்த மின் கம்பங்கள் 3 நாட்களில் மாற்றி அமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே சேதமடைந்த மின் கம்பங்கள், தந்தி தொலைக்காட்சி செய்தி காரணமாக, மாற்றி அமைக்கப்பட்டன.
x
எகால் கிராமத்தில் கீழே விழும் நிலையிலும், மின்சாரம் தாக்கும் அபாயத்திலும் மின் கம்பங்கள் இருப்பது தொடர்பாக, தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்த செய்தி மின்வாரிய அதிகாரிகள் கவனத்துக்குச் சென்ற நிலையில், மூன்றே நாட்களில் 10க்கு மேற்பட்ட மின் கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்