பீர் பாட்டிலால் இளைஞர் மீது தாக்குதல் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்
கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பீர் பாட்டிலால் ஒருவரை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பீர் பாட்டிலால் ஒருவரை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும் கோகுல் என்பவருக்கும் போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜாவை கோகுல் பீர் பாட்டிலால் ஓங்கி அடிக்கவே, அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். படுகாயமடைந்த ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய கோகுல் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story