வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு - நடிகர் தனுஷ் மனு மீது நாளை விசாரணை

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
x
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். 

நுழைவு வரியாக 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்ட நிலையில், 50 விழுக்காடு வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, தனுஷ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனிடையே, இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் போது, உத்தரவு பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்