2 இடங்களில் வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் - வங்கி உதவி மேலாளர் உட்பட 5 பேர் கைது

தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வங்கி உதவி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வங்கி உதவி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாசிங்டன் என்பவர் ராமநாதபுரத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வங்கியில் 98 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆண்டனி, குமார், வெள்ளைச்சாமி, வெள்ளைப்பாண்டி ஆகியோருடன் இணைந்து,  
வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி கோவில்பட்டியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் விருதுநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். யூடியூப்பை பார்த்து திட்டமிட்டு, பயிற்சி செய்து வந்த நிலையில், இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் வரவே, போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் கொள்ளை திட்டம் குறித்து தெரிய வந்த நிலையில், போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்