தந்தி டிவியில் செய்தி - இடுகாட்டில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்

கடந்த 26ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணம்பேட்டை இடுகாட்டில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
x
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணம்பேட்டை இடுகாட்டில் கடந்த 6 மாதங்களாக அதிகளவில் உடல்கள் எரியூட்டப்பட்டு வருவதால் கரும்புகை வெளியேறி மக்களுக்கு சுவாச கோளாறு, ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து கடந்த 26ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணம்பேட்டை இடுகாட்டில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்