அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை - ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டம்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
x
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் பேரிடர் மேலாண்மை இயக்குனர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், பரவும் விகிதம், மருத்து இருப்பு, கொள்முதல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பதவியேற்பு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





Next Story

மேலும் செய்திகள்