தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுங்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுங்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தமிழகத்தில் இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுக்கடை வருமானம் இல்லாவிட்டால் அரசு நிர்வாகத்தை நடத்துவதே பெரும் சவாலாக இருக்கும்  என்றாலும் கூட, அனைத்து வகையான மதுக்கடைகளையும் புதுவை அரசு மூடியிருப்பது துணிச்சலான நடவடிக்கை என பாராட்டி உள்ளார். அதுபோல, மதுக்கடைகள்   அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகக் குறைந்து விட்ட நிலையில், மதுக்கடைகள் திறந்திருந்தால், ஒரு வேளை உணவுக்காக வைத்திருக்கும் பணத்தைக் கூட எடுத்து வந்து மது குடிப்பார்கள் என எச்சரித்துள்ள ராமதாஸ்,  ஏழைகள் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக குடிகொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்