கொரோனாவை விட கொடியது ஸ்டெர்லைட் - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
x


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் தமிழக அரசே ஆலையை ஏற்று ஏன் நடத்த கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த குழுமத்திற்கு சொந்தமாக பல்வேறு ஆலைகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மூடப்பட்ட ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்

Next Story

மேலும் செய்திகள்