"அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை" - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, ராமநாதபுரம் கிராம மக்கள், தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, ராமநாதபுரம் கிராம மக்கள், தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்துவரும் இந்த கிராமத்தில், சாலை, குடிநீர், மருத்துவம், பேருந்து போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இனிவரும் காலங்களில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே வாக்களிப்போம் எனவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்