தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு
x
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற ஏதுவாக குறியீடுகள் வரையப்பட்டு வருகின்றன.  மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்