தாய் பாசம் கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

சென்னையில் தாய் பாசம் கிடைக்காத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...
தாய் பாசம் கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை
x
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர்  சண்முகம். சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள். 

இதில் 2 வது மகள் ரேவதி. 27 வயதான இவர், ப்ளஸ் 2 முடித்து விட்டு தன் வீட்டிலேயே எம்ப்ராய்டரி, டெய்லரிங் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். முதல் மற்றும் 3வது மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில் ரேவதி மட்டும் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். 

இதனிடையே தன் வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ரேவதி. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், ரேவதி எழுதியதாக கூறப்படும் 3 பக்க கடிதத்தை கைப்பற்றினர்.

3 பிள்ளைகளாக ஒன்றாக வீட்டில் வளர்ந்த போதிலும், பெற்றோர் தன் மீது வெறுப்பு காட்டி வந்ததாக ரேவதி, அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

ஒரு மகளாக தன்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்றும், தனக்கு தாய்ப்பாசம் என்பதே கிடைக்கவில்லை என உருக்கமாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ரேவதி. 

Next Story

மேலும் செய்திகள்