உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி - பொறுப்பேற்று கொண்டார் சஞ்ஜிப் பானர்ஜி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி, பொறுப்பேற்றுக் கொண்டார்.
x
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சஞ்சிப் பானர்ஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50- வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பொறுப்பேற்று உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்