ஜூலை மாதம் என்எல்சியில் நடந்த விபத்தில் 20 பேர் பலி - நிபுணர் குழு அமைத்து நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல்

என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் பலியானதற்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் என்எல்சியில் நடந்த விபத்தில் 20 பேர் பலி - நிபுணர் குழு அமைத்து நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல்
x
கடந்த ஜுலை மாதம் ஒன்றாம் தேதி நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் இரண்டாவது சுரங்கத்தில் அதிக திறன் கொண்ட பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

ஆனால் அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுப்பு தெரிவித்திருந்தது. தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, விபத்துக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. 

அடுத்த 6 மாதத்திற்குள் அனல்மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவும் இந்த விசாரணைக்குழு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் அந்த குழுவானது என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்து தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. 

அதில் அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர்களில் பணியாற்றுபவர்கள் கொதிகலனை கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களை மட்டுமே கொதிகலனை சுத்தம் செய்யவதற்கு பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கொதிக்கலனை சரிவர கையாள தெரியாத ஊழியர்களை அந்த பணியில் ஈடுபடுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனல்மின் நிலைய கொதிகலனை துய்மைப்படுத்துவதற்கு தனி வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்