ஆடுகளை திருடி விற்று சினிமாவில் நடித்த இருவர் கைது

ஆடுகளை திருடி விற்று சினிமாவில் நடித்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடுகளை திருடி விற்று சினிமாவில் நடித்த இருவர் கைது
x
சென்னை மாதவரத்தை அடுத்த மஞ்சம்பாக்கம் பகுதியில் ஆடுகள் வளர்த்து வரும் பழனி ​என்பவர், திடீரென ஒரு ஆடு மாயமானது குறித்து   கடந்த மாதம் 9ஆம் தேதி மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆடு திருடியவர்களை தேடி வந்தனர். 

இந்நிலைியல், அந்தப் பகுதிக்கு காரில் வந்த இருவர், சாலையில் படுத்திருந்த ஆடுகளை லாவகமாக மடக்கினர். 

டிப் டாப்பாக காரில் வந்தவர்கள் ஆடுகளை மடக்கிப் பிடிப்பதை பார்த்த போலீசார், அவர்களை கையும் களவுமாக பிடித்த விசாரித்ததில் பழனியின் ஆட்டை அவர்கள் திருடியது தெரியவந்தது. 

பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆண்டியப்பன் தெருவை சேர்ந்த நிரஞ்ஜன், லெனின்குமார் ஆகிய அந்த இருவரும் சகோதரர்கள். ஆடு திருடுவதை வழக்கமாக செய்துவந்த இவர்கள், ஆடு விற்கும் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளனர்.

சகோதரர்கள் இருவரும், நீதான் ராஜா என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளதைக் கேட்ட போலீசாருக்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை. 

முழு விசாரணைக்கு பின் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்