தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை - லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஆவணங்கள் சிக்கியது

கரூர் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் 29 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியது.
தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை - லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஆவணங்கள் சிக்கியது
x
தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமியின் பைக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் சிக்கியது. மேலும், பணியில் இருந்து ஓய்வு பெற்ற உதவியாளரிடம் இருந்து 8 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, தனியார் ஜவுளிக்கடையில் மிரட்டி பெறப்பட்ட 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய துணிகளும் கைப்பற்றப்பட்டது. நள்ளிரவுக்கு பிறகும் நடைபெற்ற இந்த சோதனையில் மேலும் பல ஆவணங்களை கைப்பற்றப்பட்டு உள்ளது என தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்