மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகள் திறப்பு - காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரியில் மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்ற அறிவிப்பை மீறி காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகள் திறப்பு - காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
x
புதுச்சேரியில் மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்ற அறிவிப்பை மீறி காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய தமுமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் நேரிட்டது. இதற்கிடையே எங்களுக்கு அறிவுப்பு எதுவும் வரவில்லை, அப்படி வந்தால் கடையை உடனடியாக மூடிவிடுவோம் என கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்