மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
x
தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.


மின்வாரிய மேலாண் இணை இயக்குனராக பிரசாந்த் மு வடநேரே  நியமனம்

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வா வர்மா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல், தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் மேலாண் இணை இயக்குனராக பிரசாந்த் மு வடநேரே அறிவிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை இணை செயலர் அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் சங்கருக்கு, பதிவுத்துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு

சுகாதாரத்துறை இணை செயலாளர் சிவஞானம், சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல்குமாரும், சுகாதாரத்துறை இணை செயலராக அஜ்ய் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கருக்கு, பதிவுத்துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்