தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
x
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த உலகநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் கண்மாயில் சீரமைப்பு பணி என்ற பெயரில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது என்றும் இதனை தடுத்து நிறுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்