பயன்பாட்டுக்கு வராத தபால் ஊழியர் குடியிருப்பு - சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்

பயன்பாட்டுக்கு வராத தபால் ஊழியர்கள் குடியிருப்புகள், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயன்பாட்டுக்கு வராத தபால் ஊழியர் குடியிருப்பு - சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்
x
பயன்பாட்டுக்கு வராத தபால் ஊழியர்கள் குடியிருப்புகள், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்டது கரிக்காடு. இங்குள்ள ஸ்டேட் பாங்க் காலனி அருகே, தபால் ஊழியர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, நீண்ட காலமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இங்கு சிலர் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கோடிக்கணக்கில் கட்டப்பட்ட குடியிருப்பு, பாழடைந்து வருவதை உடனடியாக தடுக்குமாறு, அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்