"பட்டியலின ஊராட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை" - காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு துறை தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் பட்டியல் இன ஊராட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு துறை தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பட்டியலின ஊராட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு துறை தலைவர் செல்வப்பெருந்தகை
x
தமிழகத்தில் பட்டியல் இன ஊராட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு துறை தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்ட வேண்டிய எஸ்.சி., எஸ்.டி. பிரிவு கண்காணிப்பு கூட்டத்தை, தமிழக அரசு கூட்டாததே தாக்குதலுக்கு காரணம் என்றார். 10 ஆண்டுகளில் 22 முறை நடத்தி இருக்க வேண்டிய கூட்டம், 3 முறை மட்டுமே நடத்தப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தார். அரசு அதிகாரிகள் சரியாக இருந்தால், தவறு நடக்காது என்ற செல்வப்பெருந்தகை, மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லாததால், ஆளுநரிடம் புகாரளித்துள்ளாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்