அமமுக ஒன்றிய செயலாளர் கைது : போலீசாரை கண்டித்து சாலை மறியல்
திருவாரூர் அருகே குரும்பேரி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார்.
திருவாரூர் அருகே குரும்பேரி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு சம்பந்தமாக, வைப்பூர் போலீசார், நேற்றிரவு மணிகண்டனை வீடு புகுந்து அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், தகவலறிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், போலீசார் அத்துமீறி கைது செய்ததாக கூறி வைப்பூர் காவல் நிலையம் எதிரே உள்ள சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story