பிரிந்து வாழும் மனைவியை பழிவாங்க திட்டமிட்ட கணவன், ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி அவதூறு

பிரிந்து வாழும் மனைவியை பழிவாங்க அவரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கொடூரம் மதுரையில் அரங்கேறியிருக்கிறது.
பிரிந்து வாழும் மனைவியை பழிவாங்க திட்டமிட்ட கணவன், ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி அவதூறு
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராஜமுருகன். இவர் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த பெண் ஒருவருடன் 2018ல் திருமணம் நடந்துள்ளது. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜமுருகன் திருமணமான சில நாட்களிலேயே மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண், திருமணமான 20 நாட்களிலேயே தன் கணவரை பிரிந்தார். 

தன் பெற்றோர் வீட்டிற்கு வந்த அந்த பெண், கடந்த 2 ஆண்டுகளாக அங்கேயே இருந்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ராஜமுருகன் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ராஜமுருகன், தன் மனைவியை பழிவாங்க திட்டமிட்டார். தன் மனைவி என்றும் பாராமல் அவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்துள்ளார். 

பின்னர் அந்த படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அவர். மேலும் அவ்வாறு மார்பிங் செய்யப்பட்ட படங்களை எல்லாம் மனைவி வீட்டாருக்கும் அனுப்பியிருக்கிறார் அவர். இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள், உடனே சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து இத்தகைய செயலில் ஈடுபட்ட ராஜமுருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த மாதம் சென்னையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அவரது படங்களை இதேபோல் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். 

மேலும் திருச்சியிலும் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் கணவனுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையும் பயமாய் மாறிப்போகும் என்பதில் சந்தேகமில்லை... 

Next Story

மேலும் செய்திகள்