ஒசூர்: கனமழைக்கு வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால், ஒசூர் பகுதிகளிலுள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், அஞ்செட்டியில் உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான நல்லான் சக்கரவர்த்தி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி செல்கிறது. இதேபோல் ஒசூர் அருகே உள்ள நீர்நிலைகள் ஒவ்வொன்றாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story