"சிறு குறு நிறுவனங்களுக்கு உடனடி கடன்கள் வழங்க வேண்டும்" - பம்பு செட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சிறு குறு நிறுவனங்களுக்கு உடனடி கடன்கள் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பம்பு செட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சிறு குறு நிறுவனங்களுக்கு உடனடி கடன்கள் வழங்க வேண்டும் - பம்பு செட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
x
கோவையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த பம்பு செட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மணிராஜ், ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் புதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்,. எப்போதும் நடப்பதைவிட 50 சதவீத பணிகளே நடைபெறுவதால் ஏராளமானோர் வேலையிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்,. வங்கிகள் 6 மாதங்களுக்கான வட்டியை ஒரே நேரத்தில் பிடித்துக்கொண்டதால் சிறு குறு நிறுவனங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மணிராஜ் தெரிவித்துள்ளார்,. மேலும் உடனடி கடன்கள் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் அப்போதுதான் சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்