லாரிகளில் கரும்பு தேடிய யானை - விரட்டியடித்த லாரி ஓட்டுநர்கள்

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் சாலையோரம் நின்றிருந்த லாரிகளில் கரும்பு உள்ளதா என ஒற்றை யானை லாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரிகளில் கரும்பு தேடிய யானை - விரட்டியடித்த லாரி ஓட்டுநர்கள்
x
சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் சாலையோரம் நின்றிருந்த லாரிகளில் கரும்பு உள்ளதா என ஒற்றை யானை லாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திம்பம் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நீண்ட வரிசையில் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நின்றிருந்தன. அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, லாரிகளில் கரும்பு உள்ளதா என தேடிப் பார்த்தது. யானை நடமாட்டத்தை கண்டு லாரி ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். லாரி ஓட்டுநர்கள் அனைவரும் சேர்ந்து யானையை சத்தம் போட்டு சுமார் அரை மணி நேரம் போராடி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்