சசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த மனோகரனுக்கு சொந்தமான 4 புள்ளி எட்டு நான்கு ஏக்கர் நிலத்தை சகிகலாவின் சகோதரர் சுந்தரவதம் மிரட்டி அபகரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மனோகரன் தொடர்ந்த வழக்கின் விசாரணை திருவையாறு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சுந்தரவதனம் உள்பட 11 பேரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையின் போது யாரும் ஆஜராகததால், சசிகலாவின் சகோதரர் சுந்தரவதம் உள்பட 11 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருவையாறு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் உத்தரவிட்டார். அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 10ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
Next Story