இந்தி தெரியாது என்பதற்காக கடன் வழங்க மறுப்பதா? - ராமதாஸ் கண்டனம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், இந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு பொதுத்துறை வங்கியில் கடன் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், இந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு பொதுத்துறை வங்கியில் கடன் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story