தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
x
மீனாட்சிபுரத்தை சேர்ந்த தி.மு.க நிர்வாகி மாரியப்பன் மீது, கடந்த வாரம் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது, நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த நபரை அடையாளம் கண்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், நெல்லை மாநகராட்சி முன்னாள் மண்டல சேர்மன் சுப்பிரமணியன் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் போட்டியா அல்லது உட்கட்சிப் பூசலா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்