நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் - நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் - நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு
x
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்த உரிய அனுமதி பெறாத நிலையில் போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்