தமிழகத்தில் நீட் தேர்வு தொடக்கம் - 1.17 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் நீட் தேர்வு தொடங்கியது. 14 நகரங்களில் உள்ள மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடக்கம் - 1.17 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
x
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் பங்கேற்கின்றனர். சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம், வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்