கிருஷ்ணகிரியிலும் கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு - ரூ.2.70 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
x
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்
முறைகேடு நடந்திருப்பது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிசான் நிதியுதவி திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 792 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,976 விவசாயிகள் மட்டுமே கிருஷ்ணகிரி  மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இதர 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, மற்றும் நாகர்கோவிலை
சேர்ந்தவர்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்