சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
கொரோனா ஊரடங்கில் இருந்து மக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது பொது மக்களை மிகவும் பாதிக்கும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் இருந்து மக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது பொது மக்களை மிகவும் பாதிக்கும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ள நிலையில், மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என ஜி.கே. வாசன் சுட்டிக்காட்டி உள்ளார். சுங்க சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து , உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story