நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை - முழுவதும் நிரம்பிய வரதமாநதி அணை

பழனி மற்றும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை - முழுவதும் நிரம்பிய வரதமாநதி அணை
x
பழனி மற்றும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், வரதமாநதி அணையானது, தனது முழு கொள்ளளவான 66அடியை எட்டியுள்ளது. இதனால் தற்போது அணைக்கு வரும்‌ தண்ணீர்  முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குளங்களுக்கும் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளதால், குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு போதிய நீர் கிடைக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உழவு மற்றும் நாற்று நடும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்