நித்திக்கு கடிதம் எழுதிய உணவக உரிமையாளர் - நடவடிக்கை எடுக்க கோரி புகார்
மதுரையை சேர்ந்த பிரபல உணவகத்தின் உரிமையாளர் குமார் கைலாசாவில் தன்னுடைய உணவக கிளையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என்று நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
மதுரையை சேர்ந்த பிரபல உணவகத்தின் உரிமையாளர் குமார் கைலாசாவில் தன்னுடைய உணவக கிளையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என்று நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு நித்தியானந்தா நேரலையில் தோன்றி உணவகம் திறப்பிற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் உணவக உரிமையாளரின் செயல் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளதாக கூறி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
Next Story