பேருந்து சேவையை விரைவில் துவக்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி போராட்டம்

அரசு பேருந்து சேவையை உடனடியாக துவக்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பேருந்து சேவையை விரைவில் துவக்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி போராட்டம்
x
அரசு பேருந்து சேவையை உடனடியாக துவக்க வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.  அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து போக்குவரத்து கழகங்கள் இயக்கலாம் என்ற புதிய அரசாணைக்கு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்த சூழலில் போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக புதிய அரசாணையை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி25-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 320 பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்