"கனிமொழிக்கு நிகழ்ந்தது போன்று எனக்கும் நிகழ்ந்துள்ளது" - டிவிட்டரில், ப.சிதம்பரம் கருத்துப்பதிவு
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழிக்கு நேர்ந்த அனுபவம் தமக்கும் நிகழ்ந்ததாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கருத்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தாம் தொலைபேசியில் பேசும் போது சில அரசு அதிகாரிகளும் சாதாரண மக்களும் இந்தியில் பேச வேண்டும் என கூறியதாகவும் தமக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழிக்கு நேர்ந்த அனுபவம் வழக்கத்திற்கு மாறானது அல்ல என குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி பேசாதவர்கள் மத்திய அரசு பணியில் சேர்ந்த உடன் விரைவாக இந்தி பேச கற்றுகொள்ளும் போது, ஆங்கிலம் பேச ஏன் கற்றுக்கொள்ள கூடாது என டிவிட்டரில் ப.சிதம்பரம் வினவியுள்ளார். இதனிடையே கனிமொழியை இந்தியரா என காவலர் வினவியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
Next Story