தி.மு.க-வை அரியணை ஏற்ற சூளுரை - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தி.மு.க-வை அரியணை ஏற்ற சூளுரை - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
x
கருணாநிதியின் நினைவுநாளான இன்றைய தினம், ஆறாவது முறையாய் தி.மு.க-வை அரியணை ஏற்ற சபதம் ஏற்போம் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். 

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், தி.மு.கவின் வலிமை உயர்ந்திருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அமர்ந்துள்ள தி.மு.கவின் செல்வாக்கு,  டெல்லி முதல் குக்கிராமத்து ஊராட்சி வரை உயர்ந்திருப்பதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இனம், மொழி உரிமைக்கு இடைஞ்சல் என்றால் முதலில் ஒலிப்பது தி.மு.கவின் குரல் தான் என்றும், வீண் அவதூறு, பொய் புகார்களை புறந்தள்ளி, மக்கள் ஆதரவு பெற உழைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அந்த வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்