வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் அதிரடி

கோவையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ போதைப் பொருள் பறிமுதல்   - கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் அதிரடி
x
கோவை கவுண்டம்பாளையம் பகுதிகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் டிரைவர் காலனி பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் 400 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்