சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - விசாரணை ஆவணங்களின் நகல்களை பெற்ற சிபிஐ

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த விசாரணை ஆவணங்களின் நகல்களை, சிபிஐ துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லாவிடம், சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் ஒப்படைத்தார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - விசாரணை ஆவணங்களின் நகல்களை பெற்ற சிபிஐ
x
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த விசாரணை ஆவணங்களின் நகல்களை, சிபிஐ துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லாவிடம், சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் ஒப்படைத்தார். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு விஜயகுமார் சுக்லா நேற்று வருகை தந்தார். அப்போது இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதைப் பெற்றுக்கொண்ட சிபிஐ துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா, மதுரை புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்