தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
x
திமுக எம்எல்ஏக்கள் குடியாத்தம் காத்தவராயன்,கேபிபி.சாமி,ஜெ.அன்பழகன் உயிரிழந்ததால் 3 தொகுதிகளும்  காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகள் பற்றிய நிலவரம் குறித்து, தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் காணொளி மூலம் கடந்த வாரம், ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, இடைத் தேர்தலுக்கான முதல் கட்ட ஆய்வுகளை முடித்து  வைக்கவும், வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டிருந்தது.  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையென்றாலும், தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால்,இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்