கொரோனாவால் இறப்பவர்களின் உடல் அடக்கம் வழக்கு : "ஐ.சி.எம்.ஆர் விதிமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும்" - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பலியான மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரானைக்கு எடுத்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 
மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்