"விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது"- அரசின் கோரிக்கைகளை மனுவாக அளித்தார் முதலமைச்சர்

விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
x
தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள அமைச்சர் ஆர்.கே.சிங், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் மின்சார திருத்த மசோதாவில் தமிழகத்தின் நிலைப்பாடு, புதிய மின்விநியோக திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என முதலமைச்சர் வலியுறுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும்  எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் கோரிக்கைகளை முதலமைச்சர் மனுவாக வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்