சமூக இடைவெளி கடைபிடிக்க தானியங்கி அலாரம் - திருமழிசை தற்காலிக சந்தையில் அமைப்பு

சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்யும் வகையில் தானியங்கி கருவியை, திருமழிசை தற்காலிக சந்தையில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் அமைத்துள்ளனர்.
சமூக இடைவெளி கடைபிடிக்க தானியங்கி அலாரம் - திருமழிசை தற்காலிக சந்தையில் அமைப்பு
x
சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்யும் வகையில் தானியங்கி கருவியை, திருமழிசை தற்காலிக சந்தையில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் அமைத்துள்ளனர். திருமழிசை சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என புகார் வந்ததை அடுத்து,  புதிய கருவி உருவாக்கப்பட்டு அங்குள்ள 3 கடைகளில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. சமூக விலகல் கடைபிடிக்காமல் இருந்தால், அலாரம் அடிக்கும் வகையில் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், இந்த பரிசோதனை வெற்றி பெரும் பட்சத்தில் திருவள்ளூரில் அனைத்து பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்