சுங்க சாவடியில் புதிதாக கட்டணம் வசூலிப்பு : உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக தனியார் சுங்கச்சாவடி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.
சுங்க சாவடியில் புதிதாக கட்டணம் வசூலிப்பு : உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக தனியார் சுங்கச்சாவடி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டதையடுத்து அங்கு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த புதிய நிர்வாகம் தற்போது சுங்கச்சாவடியை பராமரித்து வருகிறது. அங்கு பணிபுரிபவர்கள் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சிலர் காரில் அவ்வழியே சென்ற போது தடுத்து கட்டணம் செலுத்த ஊழியர்கள் கூறினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கசாவடி தடுப்பை தூக்கிவிட்டு காரை ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது. அந்த சுங்கசாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்