சென்னையில் 6 ஆம் தேதிக்கு பின் தளர்வுகள் - தமிழக அரசு உத்தரவு
சென்னையில் வரும் 6 தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
* கொரோனா தொற்றின் நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், ஜூலை 31 ஆம் தேதி வரையிலான ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.
* சென்னையில், இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம் என்றும், பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
* ஆன்-லைன் உணவு சேவைகள் இரவு 9 மணிவரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
* மால்கள் திறக்க அனுமதி இல்லை, இதர வணிக வளாகங்கள் ஷோரூம்கள் மற்றும் தங்க நகை, ஜவுளி கடைகள் ஆகியவை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story