தாசில்தாருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி - மயங்கிக் கிடந்த வி.ஏ.ஓ.வை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பு

தாசில்தாருக்கு கடிதம் எழுதிய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வி.ஏ.ஓ., தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாசில்தாருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி - மயங்கிக் கிடந்த வி.ஏ.ஓ.வை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பு
x
தாசில்தாருக்கு கடிதம் எழுதிய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வி.ஏ.ஓ., தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைமணி என்ற பெண் வி.ஏ.ஓ., தனக்கு கீழ் பணிபுரியும், கார்த்திக் மற்றும் ரவி ஆகியோர் தாம் சொல்வதை கேட்பதில்லை என கடிதம் எழுதியுள்ளார். இதனால், மன உளைச்சல் அடைவதாகவும், குடும்ப பிரச்சினையாலும், தாம் தற்கொலை செய்யப்போவதாக தாசில்தாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, அவரது வீட்டுக்கு தாசில்தார் வந்தார். அப்போது, அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிய நிலையில், வி.ஏ.ஓ. கலைமணி இருந்தது தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்