ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்கள் - தமிழகம் அழைத்து செல்ல அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 44 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்
ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்கள் - தமிழகம் அழைத்து செல்ல அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை
x
ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 44 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஈரானில் தவித்து வந்த தமிழக மீனவர்களில் 600 பேர் கப்பலில் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் இடம் இல்லை என கூறி 44 மீனவர்கள்  அழைத்து வரப்படவில்லை என்றும், தங்கள் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில் உணவின்றி செய்வதறியாது தவித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் வீடியோ மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்