வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி - வரவேற்பு தெரிவிக்கும் பொதுமக்கள்
சென்னையில், கொரோனா நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி துவங்கியுள்ளது.
சென்னையில், கொரோனா நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை அகரத்தில் ரேஷன் கடை ஊழியர்கள், ஸ்கேனிங் மெஷின் மூலமாக வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 100 குடும்ப அட்டைதாரர்களில் 600 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பொது மக்களுக்கு வரும் 26 தேதிக்குள் வழங்கப்படும் எனவும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். வீடுகளுக்கே வந்து ரேஷன் கடை ஊழியர்கள், நிவாரணம் வழங்கி வருவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Next Story