கொரோனா பயத்தால் தேர்வுத்துறையில் தேங்கி கிடக்கும் பணிகள்

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் பத்து பேருக்கும் அதிகமானோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பயத்தால் தேர்வுத்துறையில் தேங்கி கிடக்கும் பணிகள்
x
சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் பத்து பேருக்கும் அதிகமானோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், இயக்குனர் , இணை இயக்குனர் , உதவி இயக்குனர், தட்டச்சர், கண்காணிப்பாளர் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகம், கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியிருக்கிறது. இயக்குனர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 250 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், கொரோனாவிற்கு பயந்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவே அஞ்சுகின்றனர் . தினமும் 20 பேர் கூட வருவதில்லை எனவும், இதனால் தேர்வுத் துறை பணிகள் மலை போல் தேங்கி இருப்பதாகவும் தேர்வு துறை அலுவலர்களும், ஊழியர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்