கப்பலில் தூத்துக்குடிக்கு வந்த 198 பயணிகள் : தூத்துக்குடி துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை

மாலத்தீவில் இருந்து கப்பல் மூலமாக 198 பயணிகள் தூத்துக்குடிக்கு வந்தனர்.
கப்பலில் தூத்துக்குடிக்கு வந்த 198 பயணிகள் : தூத்துக்குடி துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை
x
மாலத்தீவில் இருந்து கப்பல் மூலமாக 198 பயணிகள் தூத்துக்குடிக்கு வந்தனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஐராவத் கப்பலில் துறைமுகம் வந்த அவர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர், அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார். மாலத்தீவில் இருந்து வந்த 198 பேரும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்